search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை"

    கும்மிடிப்பூண்டியில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள்ளக்காதலன்களுடன் தாயை போலீசார் கைது செய்தனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரின் மனைவி கடந்த 14-ந்தேதி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் மாயமானார்.

    அதன் பின் 3 நாட்களுக்கு முன்பு குழந்தையுடன் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் உள்ள உறவுக்கார வாலிபர்கள் சிவா மற்றும் மணி ஆகியோருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் அவர்களுடன் சென்று தங்கியது தெரிய வந்தது.

    இந்த நிலையில் பெண் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவா, மணி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    மேலும் குழந்தையின் மீதான பாலியல் கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாயையும் கைது செய்தனர்.
    ×